கே.ஐ.டி கல்லூரியில் பொங்கல் விழா

கோவையில் அமைந்துள்ள கே.ஐ.டி-கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் 11.1.2021 அன்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கல்லூரி நிறுவனத் தலைவர் பொங்கலூர்.நா.பழனிச்சாமி கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையின் சிறப்பு அம்சங்களைப் பற்றி விளக்கிக் கூறினார். கல்லூரியில் பூக்களைக் கொண்டு வண்ணக் கோலங்கள் வரைந்தும், பாரம்பரியத்தைப் போற்றும் விதமாக வேட்டி, சேலை உடையணிந்தும் வெகுவிமரிச்சையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கே.ஐ.டி.கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்  கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, கல்லூரி துணை முதல்வர் ரமேஷ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.