மருத்துவ படிப்புகளுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு 4 ம் தேதி தொடங்குகிறது

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நவம்பர் 18-ந் தேதி தொடங்கியது. முதலில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நவம்பர் 23-ந் தேதி தொடங்கியது. டிசம்பர் 10ம் தேதி முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ஜனவரி 4ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வருகிற 4ம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடக்கிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இன்னும் 12 இடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து அந்த 12 இடங்களுக்கான கலந்தாய்வில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் பங்கேற்கலாம். ஜனவரி 5ம் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 2ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெற உள்ளது.