தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பு குறைவு

கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருவதால் தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பு குறைவு எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்று சூழலில் ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் 67 ஆயிரமாக உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 95 ஆயிரமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்க்காக மகராஷ்டிர, மத்தியப்பிரதேச மாநிலங்களில் இருந்து கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டுவரப்படவுள்ளன.