வரும் 31ம் தேதி மதுக்கூட்டங்கள் இயங்க அனுமதி இல்லை

கோவையில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு கிளப்புகள், நட்சத்திர ஹோட்டல்கள், தமிழ்நாடு ஹோட்டல் மற்றும் விமான நிலைய உணவகங்கள் போன்ற மதுபான உரிம இடங்கள் அனைத்தும் எதிர்வரும் 31.12.2020 அன்று இரவு 10.00 மணிக்கு மேல் மதுக்கூட்டங்கள் இயங்க அனுமதி இல்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்ய பட்டாலோ அல்லது மதுக்கூட்டங்கள் இயங்கினாலோ சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.