ரயில்வே பணிமனையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் !

கொரோனா தொற்றால் நீண்ட இடைவெளிக்கு பின் ரயில்வே பணிமனையில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகை.

சேலம் கோட்டம் கோவை ரயில்வே பணிமனை ஊழியர்கள் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடினர். வருடம் தோறும் ஒவ்வொரு பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடும் பனைமனை ஊழியர்கள் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கினால் பல்வேறு பண்டிகைகளை கொண்டாட முடியாமல் போனது.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நீண்ட நாள் இடைவெளிக்கு பின் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதில் சாண்டா வேடமணிந்து ஆடல் பாடல்களுடன் இப்பண்டிகையை கொண்டாடினர்.