இந்துஸ்தான் கல்லூரியில் 30 வரை பாரதி விநாடி வினா போட்டி

கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் மொழித் துறை பாரதியாரின் 138 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பன்னாட்டு அளவிலான விநாடி வினா போட்டியை இம்மாதம் இறுதிவரை நடத்துகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் என இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதனைச் சிறப்பாக ஒருங்கிணைத்து வரும் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் பிரபு, கணேசன் ஆகியோரை மொழித் துறைத் தலைவர் ரமேஷ்குமார், முதல்வர் பொன்னுசாமி மற்றும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி கருணாகாரன் ஆகியோர் பாராட்டினர். இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் தலைவர் கண்ணையன், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், கல்லூரி செயலர் பிரியா சதீஷ்பிரபு ஆகியோர் மாணவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.