கோபியை சேர்ந்த விவசாயி முத்து ரமணன் வழங்கினார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்திப்பெற்ற பச்சைமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வள்ளி, தெய்வாணை கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு கோபியை சேர்ந்த விவசாயி முத்துரமணன் 18 கிலோ எடையில் வெள்ளி கவசம் செய்து அதனை தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஸ்ரீ கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு சாற்றப்பட்டது. மேலும், அமைச்சருக்கு வெள்ளி வீரவாள் வழங்கப்பட்டது. இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.