செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

கோவை  துடியலூர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் எனும் டியூகாஸ் (TUCAS) நிறுவன வளாகத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, கௌமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதில் டியூகாஸ் தலைவர் சின்னவேடம்பட்டி சுப்பையன், மேலாண் இயக்குனர் விஜய சக்தி, துணை தலைவர் செல்வராஜன் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.