பாதுகாப்பு  நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை சார்பாக மேற்கொள்ளபட வேண்டிய பாதுகாப்பு  நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையாளர் பாஸ்கரன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் பழனிசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன், தலைமைப் பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.