கழிவுநீரகற்று வாரியத்தில் காலி பதவிகளுக்கு பணிநியமனம் : ஆணையினை வழங்கிய அமைச்சர்

2019ஆம் ஆண்டு சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் காலியாக இருந்த பதவிகளுக்கு நேரடி பணிநியமன ஆணைகள் மூலம் நியமிக்கப்பட்டவர்களில் பணியில் சேராத இடங்களுக்கு அதே இனம் மற்றும் இடஒதுக்கீட்டினை சார்ந்த அடுத்த மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு பணிநியமன ஆணையினை சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (23.11.2020) தலைமை செயலகத்தில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர்சிங், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன், செயல் இயக்குநர் டாக்டர் பிரபு சங்கர், உட்பட பலர் கலந்துகொண்டனர்.