ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் இணைப்பு விழா

கோவை பச்சாபாளையத்திலுள்ள தன்னாட்சி நிறுவனமாகிய ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் 18வது முதலாம் ஆண்டு மாணவ மாணவியர் இணைப்பு விழா 18.11.2020 புதன்கிழமை அன்று இணையவழி மூலம் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு எஸ்,என்,ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் லஷ்மிநாராயணசுவாமி தலைமையேற்று மாணவ மாணவியர்கள் தங்களிடம் உள்ள திறமை மற்றும் கல்லூரியில் உள்ள வசதி வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களையும், சமுதாயத்தையும் உயர்த்தும் வகையில் செயல்பட வேண்டும் என்று கூறினார். சிறப்பு விருந்தினராக ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு தனது சிறப்புரையில், தாங்கள் தேர்வு செய்த துறை சார்ந்த அறிவை ஆங்கில புலமையுடன் வளர்த்து இன்றைய சூழலில் உள்ள சமுதாய சவால்களுக்கு விடை தரும் பொறியாளர்களாக உருவாகி சமுதாய முன்னேற்றத்திற்கு உருதுணையாக மாற வேண்டும் என்று கூறினார். முன்னதாக விழாவின் வரவேற்புரையை கல்லூரி முதல்வர் பால்ராஜ் வழங்கினார். மேலும், விழாவின் நன்றியுரையை கட்டடவியல் துறை தலைவர் முரளி வழங்கினார்.