சிறுவாணி குழாய் உடைந்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

கோவை நஞ்சப்பா ரோட்டில் சிறுவாணி குழாய் உடைந்ததால் அப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கோவை நஞ்சப்பா ரோடு பகுதியில் உள்ள சிறுவாணி குழாய் உடைந்ததால் அப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில், அவனாசி ரோடு மேம்பாலம், காட்டூர், போன்ற பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பார்க் கேட்டில் இருந்து அவிநாசி ரோடு போகும் சாலையை தாற்காலிகமாக தடுப்புகள் வைத்து போக்குவரத்தை நிறுத்தி விட்டதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.