கறந்த சில மணி நேரங்களில் இல்லம் தேடி வரும் ‘ஹைலைப் மில்க்’

கோவை, பொள்ளாச்சியில், ஏ2 வகை நாட்டுமாட்டு பால், தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், ஹைலைப் மில்க் பெயரில் அறிமுகமாகிறது.

பொள்ளாச்சியை சேர்ந்த இளம் சகோதரர்கள், சரவணக்குமார் மற்றும் பிரபாகரன் இது குறித்து பேசுகையில், பண்ணையிலிருந்து பால், குளிர்பதனம் செய்யாமல், எவ்வித திரவமும் கலக்காமல் நேரடியாக மீண்டும் பயன்படுத்த தக்க வகையிலான கண்ணாடி பாட்டிலில் நேரடியாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.110 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது 220 நாட்டு மாடு பசுக்களை வைத்துள்ளனர். இவற்றிலிருந்து பெறப்படும் பாலை, நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கறந்த சில மணி நேரங்களில் விநியோகம் செய்யப்படுகிறது.

கிராமப்புறங்களில் மட்டுமே விற்பனை செய்து வந்த ஏ2 வகை நாட்டுமாட்டு பால் விற்பனையை விரிவுபடுத்தி வருகிறோம்.