‘800’ படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகுவதாக தகவல் !

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இவரது வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது அப்போது தொடங்கியது சர்ச்சை. ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நாடிர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று சினிமா பிரபலங்கள், அரசியல் காட்சிகள் என பலர் கோரிக்கை வைத்தனர். மறுபுறம் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா ஆகியோர் இந்த படத்தில் அவர் நடிப்பதில் என்ன தவறு என்றும் கேள்வியை எழுப்பினர்.

இந்நிலையில் தனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று முத்தையா முரளிதரன் அறிக்கையின் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிக்கையை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள விஜய் சேதுபதி, “நன்றி, வணக்கம்” என்று கருத்தும் பதிவிட்டிருந்தார். தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி, ”நன்றி வணக்கம்” என்றால் முடிந்து விட்டது என்று அர்த்தம், முத்தையா முரளிதரன் படம் பற்றி பேசுவதற்கு இனி ஒன்றுமில்லை என கூறினார்.