கே.பி.ஆர் கலை கல்லூரியில் இளைஞர் எழுச்சி நாள் விழா

கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் பைந்தமிழ் மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் (15.10.2020) அன்று பாரதரத்னா, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளையொட்டிக் கல்லூரி வளாகத்தில் இளைஞர் எழுச்சி நாள் விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அப்துல் கலாம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு கே.பி.ஆர் கலை கல்லூரியின் முதல்வர் பாலுசாமி மலர் தூவி வணங்கினார். தொடர்ந்து, வணிகவியல் துறை முதன்மையர் குமுதாதேவி கணினிஅறிவியல் துறை முதன்மையர் சசிகலா, மேலாண்மைத்துறை இணைப்பேராசிரியர் வனிதா மற்றும் கல்லூரிப் பேராசிரியர்களும், மாணவர்களும் மலர் தூவி வணங்கினார்கள். பின்னர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பத்து பொன்மொழிகளைக் கல்லூரி முதல்வர் முன்னிலையில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள்  உறுதி ஏற்றுக் கொண்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். இந்நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும்  மாணவர்கள் கலந்துகொண்டனர்.