மதுரை விமான நிலையத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவாஞ்சலிக்கு செல்லும்  ராம் மோகன் ராவுக்கு பிரமாண்ட வரவேற்பு

மதுரை விமான நிலையத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவாஞ்சலி நிகழ்வுக்கு செல்லும் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவுக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள கட்டபொம்மன் நினைவிடத்தில் 221 வது நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மற்றும் Dr.RMR பாசறை நிர்வாகி டாக்டர் ராம் மோகன் ராவ் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இவரை பாசறை நிர்வாகிகள் திண்டுக்கல் கிருஷ்ணமூர்த்தி வேங்கட விஜயன் விடுதலை களம் நாகராஜன் முத்துவேல் ராஜன் பிரேம்குமார் ஜெயக்குமார்  மற்றும் Dr.RMR பேரவை நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர். மேலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்தார்.

பின்னர் இவர் செய்தியளர்களிடம் பேசுகையில், Dr.RMR பாசறை சார்பில் சமுதாயத்திற்காக விடுதலைக்காக பாடுபட்ட வீரர்களை ஆண்டுதோறும் கௌரவிக்க திட்டமிட்டு வருகிறோம். கடந்த ஆண்டு கட்டபொம்மன் நினைவஞ்சலியை திட்டமிட்டோம் பலத்த மழையின் காரணமாக கடந்தாண்டு வரமுடியவில்லை.

இந்தாண்டு 221 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை சிறப்பாக கொண்டாட பாசறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை. மாபெரும் விடுதலை போராட்ட வீரர்களை கௌரவிக்க வேண்டும் என்பதே நோக்கம்.

வைரஸ் தொற்று காலத்தில் தமிழக அரசு எடுக்கின்ற நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது, அரசைப் பாராட்டி ஆகவேண்டும். 2021 தேர்தல் குறித்து அப்போது பேசுவோம் ரஜினி இயக்கம் மற்றும் DR.Rmr  பேரவை கூட்டணி குறித்த தகவல் விவாதங்கள் தவறானவை என்று கூறினார்.

தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் கட்டபொம்மன் நினைவிடத்தில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இவரை மதுரையிலிருந்து வழிநெடுக தொண்டர்கள் வரவேற்றனர்.