முதல்வரின் தாயார் தவசாயி அம்மாள் காலமானார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவசாயி அம்மாள் வயது (93) திங்கள்கிழமை இரவு 11 மணி அளவில் காலமானார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்த்த கருப்பசாமியின் மனைவி மற்றும் தமிழக முதல்வரின் தாயாருமான தவசாயி அம்மாள் அவரது பூர்வீக இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக காலமானார்.

அவருக்கு முதல்வர் பழனிசாமி, கோவிந்தராஜ் ஆகிய இருமகன்களும் , விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.  இவரது கணவர் கருப்பசாமி சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.