ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் வசிக்கும் கால்டாக்சி, ஆட்டோஓட்டுநர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாள் நலத்திட்டங்களின் தொடர் நிகழ்ச்சியாக அரிசி மூட்டை தொகுப்புகள் வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் அறிவுறுத்தலின்படிபல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார் ஆகியோரின் அறிவுரைப்படி பிறந்ததின நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கோவை 58 வது வார்டு ஒண்டிப்புதூர் மண்டல நீலிகோணம்பாளையம் பகுதியில் எழுபது ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு அரிசி மூட்டைகளை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் பிரீமியர் பிரபாகரன் வழங்கினார். தொடர்ந்து அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு மைலோ ஆரோக்கிய சத்து மாவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திர பிரசாத் முத்துக்குமார் ரவிச்சந்திரன் வேணுகோபால் செல்லையா, ஆட்டோ பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.