இந்துஸ்தான் கல்லூரி மொழித்துறை ஒருங்கிணைப்பாளர்களுக்கு வாழ்த்து

இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் மொழித்துறை சார்பாக பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி (11.09.2020)அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள், கவிதை, ஓவியம், பேச்சு, பாடல் ஆகியன நடத்தப்பெற்றன. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளின் முடிவுகள் அனைத்தும் கடந்த 7ஆம் தேதி  வெளியிடப்பட்டு வெற்றியாளர்களுக்கு விருது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் கல்லூரி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் விதத்தில் போட்டிகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் பா.பிரபு, நா.கணேசன், முனைவர் சி.அம்சவேணி, ரா.திவ்யா ஆகியோரை மொழித்துறைத் தலைவர் முனைவர் இரா.ரமேஷ்குமார், முதல்வர் முனைவர் அ.பொன்னுசாமி மற்றும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் கே.கருணாகரன் ஆகியோர் பாராட்டினர். மேலும், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், மற்றும் செயலர் பிரியா சதீஷ்பிரபு ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.