இயற்கை விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற முயற்சி மே‌ற்கொ‌ள்ளு‌ம் இயற்கை ஆர்வலர்கள்

தீ கிரீன் பார்ம்ஸ், சார்பில் கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் வாயிலாக இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகின்ற, டாக்டர் திவ்யா வாசுதேவன் பேசுகையில், இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காகவும், இயற்கை விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான உத்தரவாதத்தை வழங்குவதற்காகவும், கோவையிலுள்ள ஜீ.வி ரெசிடென்சி பகுதியினை வாடகைக்கு வழங்கியிருக்கிறோம் எனவும், இங்கு இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துவதற்கான, பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, குழந்தைகளை விவசாயிகள் போல வேடமிட்டு சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. மேலும் தீகிரீன் பார்ம்ஸ்ன் முக்கிய பங்காக, கோவை மாவட்டத்தில் நகர்ப்புறத்தில் காய்கறிகளை வளர்க்கவும், அதனை அறுவடை செய்யவும் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், நஞ்சில்லா இயற்கை காய்கறிகளை வளர்க்க பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும், இயற்கையுடன் சேர்ந்து குடும்பத்துடன் நேரத்தை செலவிடுதல், என பல்வேறு முக்கிய அம்சங்களை வெளிக் காட்டி வருகின்றனர்.

மேலும், இதனை நகர்ப்புற மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் தீ பவுண்டேசன் கடந்த ஒரு வருடமாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும், கல்லூரிகளையும், தத்தெடுத்து சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தை சொல்லிக் கொடுத்து வருகிறோம் எனவும், 4 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட உழவர்களுக்கு இயற்கை விவசாயத்தைக் கற்றுக் கொடுத்து உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.