கோவையில் இன்று 550 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் இன்று 550 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இன்று 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, மாவட்டத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 32ஆயிரத்து 620ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் எண்ணிக்கை 444 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று 511 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கோவை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 116 பேர் கொரோனா தொற்றில் இருந்து இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி 5 ஆயிரத்து 60  பேர் சிகிச்சையில் உள்ளனர்.