அரசுக்கு நன்றி தெரிவித்த வேலைவாய்ப்பு திட்டப் பயனாளி

தமிழ்நாடு அரசின் சார்பில் படித்த மற்றும் வேலை வாய்ப்பற்றவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த  இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் கோவை மாவட்டத்தை சார்ந்த சூர்யகுமார் என்பவர் பயன் பெற்று அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், நான் என்ஜினியர் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். வேலைவாய்ப்பு தேடிக்கொண்டிருந்தேன். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நடத்தப்படும் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் ஆன்லைனில் நடத்தப்படுவது பற்றிய அறிவிப்பினை நாளிதழில் பார்த்தேன்.

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்தேன். அதன் பின்னர் நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. இதன்மூலம் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கப் பெற்றது. இவ்வாய்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.