ஆத்துப்பாலம் தடுப்பணையில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளம்

கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து ஆத்துப்பாலம் தடுப்பணையில் நீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.

கோவையில் கடந்து சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சிறுவாணி உள்ளிட்ட முக்கிய நீர் நிலைகள் நிறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் கோவை குற்றலாத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கோவை நகரில் உள்ள குளங்கள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் புட்டுவிக்கி தடுப்பணை, ஆத்துப்பாலம் கால்வாயில் நீர் ஆர்பரித்துச் செல்கிறது.