இந்துஸ்தான் கலை கல்லூரியில் இணையவழி வினாடி வினா போட்டிகள்

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மொழித்துறை சார்பில் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்த நாட்களை முன்னிட்டு அனைத்துப் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள் இணையவழியில் நடைபெற்றது.

போட்டியில் 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர் அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. போட்டியின் ஒருங்கிணைப்பு பணிகளை பேராசிரியர் அருவி தேன்மொழி, உதவிப்பேராசிரியர் கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

நிர்வாகத்தலைவர்கள் கண்ணையன், சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஷ் பிரபு, முதன்மை செயல் அதிகாரி கருணாகரன், கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, துறைத்தலைவர் ரமேஷ் குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த இணையவழி போட்டிகளில் தமிழகம் மட்டுமன்றி,  அந்தமான், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.