கோவையில் இன்று 565 பேருக்கு கொரோனா

கோவையில் இன்று (19.9.2020) 565 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சுங்கம் பணிமனையை சேர்ந்த 49 வயது பெண், 32, 53, 56 வயது ஆண்கள், அரசு மருத்துவமனையை சேர்ந்த 23 வயது ஆண் பயிற்சி மருத்துவர், 46 வயது பெண் மருத்துவப் பணியாளர், வெள்ளக்கிணர் ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பை சேர்ந்த 39 வயது ஆண், 9 வயது சிறுவன், போத்தனுர், உப்பிலிப்பாளையம், மற்றும் பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்புகளை சேர்ந்த 48, 49, 56 வயது ஆண்கள்,

சித்தாபுதுர் வருமானவரி அலுவலர்கள் குடியிருப்பை சேர்ந்த 50 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர கணபதியில் 24 பேர், பொள்ளாச்சியில் 20 பேர், மேட்டுப்பாளையத்தில் 14 பேர், சௌரிபாளையம், சிங்காநல்லூரில் தலா 9 பேர், அன்னூரில் 8 பேர், குனியமுத்தூர், காரமடையில் தலா 6 பேர் உள்பட 565 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் குணமடைந்தோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கை

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 308 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

கோவையில் இதுவரை 20 ஆயிரத்து 680 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 288 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 25 வயது இளைஞர், 55 வயது ஆண், தனியார் மருத்துவமனையில் 73 வயது முதியவர், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 53 வயது ஆண் ஆகிய 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 376 ஆக அதுகரித்துள்ளது.