மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு : பெரியாரின் பிறந்த தினம் இன்று

தமிழகத்தின் பகுத்தறிவு பகலவன் என்று போற்றி புகழப்படும் ஈ.வே.ராமசாமி.,யின் 142வது பிறந்த தினம் இன்று (17.9.2020) பெரும் செல்வந்தரின் மகன் தான் இந்த ஈ.வே.பெரியசாமி. சமூக வேறுபாடுகளைக் கண்டு கொதித்துப் போன இந்த மனிதர் இதனை சரிக்கட்டும் முயற்சிகளை கையில் எடுக்கிறார்.

காங்கிரஸ் இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக களமிறங்கி, அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வகுப்புவாரி பிரதி நிதித்துவத்திற்காகப் போராடியவர் இவர். அது மட்டுமல்லாது, பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு, மதங்களால் வரும் பிரச்சனைகளை ஒழிக்க மதங்களுக்கு எதிரான பிரச்சாரங்களைக் கையில் எடுத்து பெரியார் என்று போற்றப்படுகிறார் இவர்.

இன்று ஒடுக்கப்பட்ட மற்றும் பின் தங்கிய மக்களுக்கு தமிழகத்தில் சலுகைகள் பல கிடைக்கவும், சமூக நீதி கிடைக்கவும் வழி வகுத்தவர் இந்த பகுத்தறிவு பகலவன். ஆனால், அரசியல் ரீதியாக அவரால் முன்னேறிய இந்த சமுதாயம் அவரை இழிவு படுத்திக் கொண்டிருக்கிறது. அவரது பிறந்த நாளில், அவர் நம் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பணிகளை, அறமின்றி அவரை குறை கூறும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.

ஹாப்பி பர்த்டே பெரியார்.