பாதிப்பில் இருந்து மீண்ட 5 பேருக்கு மீண்டும் கொரோனா

கோவையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 5 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியை அடைந்துள்ளனர்.

கோவையில் தினந்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கோவையில் தினமும் 500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த சூழலில், இன்று 446 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் பாதிப்பு இருக்காது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்து வந்த சூழலில், 5 பேருக்கு மீண்டும் தொற்று உறுதியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதாரத்துறை 25 வயது பெண் அலுவலர், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மூவர் மற்றும் கொடிசியாவில் சிகிச்சையில் இருந்த ஒருவர் என 5 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.