48 மாதங்களுக்குள் அவிநாசி சாலை மேம்பாலப் பணி  முடிக்க உத்தரவு

கோவை அவினாசி சாலையில் 10 கி.மீ தூரத்திற்கு உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை  அமையவிருக்கும் நான்கு வழி மேம்பால கட்டுமானப் பணிகள் 48 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளன.

அவிநாசி நோக்கி செல்லும் வழித்தடத்தில் இரு ஏறு தளங்கள் மற்றும் அவிநாசியில் இருந்து கோவைக்கு வரும் வழித்தடத்தில் இரு ஏறு தளங்கள் & இரு இறங்கு தளங்கள் அமையவுள்ளன என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.