கோவையில் 15 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை

கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக  உயர்ந்து வருகிறது. இதற்கு இணையாக குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்க ஒரு செய்தியாக உள்ளது.

இந்நிலையில் நேற்று ஒருநாள் மட்டும் கோவையில் பயிற்சி மருத்துவர்கள் இருவர் உள்பட 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 894 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கோவையில் நேற்று 5 பேர் உட்பட கொரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 294 ஆக உள்ளது.