பொலிவிழந்து காணப்படும் சித்தாபுதூர் ஐயப்பன் கோவில்

கேரளா மக்களின் முக்கிய பண்டிகை ஓணமாகும். ஓணம் பண்டிகை ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில்களுக்கு செல்ல மக்கள் யாருக்கும் அனுமதி இல்லை. இந்நிலையில் கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வருடம்தோறும் காலை 4 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து தீபம் ஏற்றி வழிபடுவர். அனைவருக்கும் தீபாராதனை, பிரசாதங்கள், வழங்கப்படும். ஆனால் இம்முறை பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை முற்றிலும் மாறுதலாக ஓணம் பண்டிகை காணப்பட்டது.

குறைந்தளவு மட்டுமே பக்தர்கள் காணப்பட்டனர். பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி வெளியில் நின்றபடியே சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கோவிலுக்குள் குருமார்கள் சுவாமிக்கு பூஜை புனஷ்காரங்கள் செய்தனர். இதை பக்தர்கள் அனைவரும் வெளியில் நின்றவாறே கண்டு களித்தனர். இதனால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை பொலிவிழந்து காணப்பட்டது. கொரோனா காலம் கோவிலுக்குள் சென்று வழிபடாதது வருத்தம் எனினும் கொரோனா என்பதால் இம்மாதிரியான வழிபாடும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இருப்பதும் நன்மைக்கே என்று பக்தர்கள் தெரிவித்தனர்.