ஏப்ரல் 1 வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

நிதியாண்டு முடிவதையொட்டி நாளை (மார்ச் 26) முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2016-17 நிதியாண்டு முடிவதால் பொதுமக்கள் வரி செலுத்துவது உள்ளிட்ட அரசு சார்ந்த வங்கி சேவைகளை எளிதாக்கும்வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் என வங்கி சேவைகளை வழங்கும் அனைத்து வங்கிகளும் இந்த உத்தரவினைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.