இன்று ஒரே நாளில் 393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவையில் தலா மூன்று மருத்துவ பணியாளர்கள், போலீசார் உட்பட இன்று ஒரே நாளில் 393 பேருக்கு கொரோனா

கோவை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ச்சியாக உறுதியாகி வரும் சூழலில், இன்று மருத்துவ பணியாளர்களான 2 பெண்கள் மற்றும் 2 ஆண் காவலர்கள் மற்றும் ஒரு பெண் காவலர் என இன்று ஒரே நாளில் 393 பேருக்கு கொரோனா பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் செல்வபுரத்தில் 27 பேர், பி.என்.பாளையத்தில் 17 பேர், ரத்தினபுரியில் 16 பேர், சூலூரில் 11 பேர், உக்கடம், கணபதியில் தலா 10 பேர், பீளமேட்டில் 9 பேர், துடியலூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடையில் தலா 8 பேர், இடையர்பாளையம், ஆர்.எஸ்.புரம், உடையாம்பாளையத்தில் தலா 6 பேர் உள்பட 393 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.

அதன்படி, கோவையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது.