கோவையில் மேலும் 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கோவையில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கோவையில் இன்று (13.8.2020) மேலும், 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் மொத்த பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7,884 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றி மேலும் 7 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கோவை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 175 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கோவையில் இன்று(13-8-2020) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நோயாளிகளின் பகுதி வாரியான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.