ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வட்டார அளவிலான அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வட்டார அளவிலான அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் ஏதாவது ஒரு துறையில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வணிக வங்கிகள் அல்லது கிராமப்புற வங்கிகளில் ஏதாவது ஒன்றில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

3850 அதிகார பணியிடங்களில் சென்னையில் மட்டும் 550 காலியிடங்கள் உள்ள இப்பணிக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பக் கட்டணமாக பட்டியலினத்தார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை தவிர ரூபாய் 750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்போர் வயது ஆகஸ்ட் 1 அன்று 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு விவரங்கள் :

மேலும் விவரங்களை www.sbi.co.in / careers என்ற இணையதளத்தில் அறியலாம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் நேர்காணலில் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெற ஏதுவாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாதிரி நேர்காணல் கட்டணமின்றி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் மாதிரி நேர்காணல் நிகழ்ச்சியில் வங்கியில் உயர் நிலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர் இதன் மூலம் இணைய வழி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் இந்த மாதிரி நேர்காணல் பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

எனவே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அவர்களது பெயர் கல்விதகுதி மற்றும் பிற விவரங்களை studycirclecoimbatore@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி மாதிரி நேர்காணலுக்கு  பதிவு செய்து கொள்ளாம்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் இம்மாதிரி நேர்கோணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது.