பகுதி நேர அரசு தொழில்நுட்ப கல்லூரி பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

2020 – 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பட்டயப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்களுக்கு பகுதிநேர பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு  தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது

இதுகுறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நிர்வாகிகள், ”2020 – 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பட்டய படிப்பு முடித்த விண்ணப்பதாரர்களுக்கு பகுதிநேர முதலாமாண்டு பிஇ., பிடெக் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணவர்கள் WWW.PTPE_TMEA.COM என்ற இணையதள வாயிலாக தேவையான சான்றிதழ்களுடன் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் சமர்ப்பித்த சான்றிதழ் சரிபார்ப்பு தரவரிசை மற்றும் கலந்தாய்வு அனைத்தும் இணையதள வாயிலாக மட்டும் நடைபெறும்” என்றனர்.