கொரோனா காலத்திலும் சுதந்திரத்தை கொண்டாடாமல் இருக்கக்கூடாது..!

நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகும் தேசியக்கொடிகள் ஆங்கிலேயே ஆட்சிக்குள் சிக்கியிருந்த இந்தியா சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

சுதந்திரம் பெற்ற பல ஆண்டுகள் ஆன போதிலும் இந்த தினத்தை கொண்டாட மக்கள் யாரும் தவறுவதில்லை.ஆண்டுதோறும் இந்த நாளில், அவரவர் வீதிகளில், பொது இடங்களில் தேசிய கொடுயை ஏற்றியும், இனிப்புகளை வழங்கியும் இத்தினத்தை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் பாரத தேசத்து மக்கள்.
அவ்வாறு, வரும் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான தேசிய கொடிகள் தயாரிக்கும் பணி கோவையில் நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரிகள் இல்லாத இந்த காலகட்டத்தில், கிடைக்கும் ஆர்டர்களை கொண்டு கொடிகளை தயாரித்து வருவதாகவும், அனைவரும் நெசவாளர்களுக்கு உதவே வேண்டும் என்கிறார் கொடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராஜேந்திரன்.