‘தந்த்ரா’ என்றால் காமம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

‘தந்த்ரா’ என்றாலே பலர் இன்று காமம் என்று புரிந்து வைத்துள்ளனர். தந்த்ரா என்பது உண்மையில் என்ன?

தந்த்ரா எப்போது சாத்தியமாகிறது? இங்கே, அந்த அற்புதத் தொழில்நுட்பத்தைப் பற்றி விளக்குகிறார் சத்குரு.

சத்குரு:

‘தாந்த்ரீகம்’ என்றால் “தொழில்நுட்பம்” என்று அர்த்தம். நிறைய மேற்கத்திய நாட்டினர் தாந்த்ரீகத்தைப் பற்றி புத்தகங்கள் எழுத ஆரம்பித்ததால், மக்களின் மனதில் மெதுவாக, தாந்த்ரீகம் என்ற வார்த்தைக்கு, காமம் என்ற அர்த்தம் தங்கிவிட்டது. ஆனால் தாந்த்ரீகத்திற்கும் காமத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. தாந்த்ரீகம் என்பது ஒரு வழிமுறை – நமக்கு வேண்டியதை உருவாக்குவதற்காக, வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பம்.

நமக்கு வேண்டிய விதத்தில் பொருள்நிலை சூழ்நிலைகளை உருவாக்கும், பருப்பொருள் தொழில்நுட்பமாகும். மனித மனங்கள் தங்களுக்கு வேண்டியதை உருவாக்க முயல்கின்றபோது, அவை நிறைய விஷயங்களைக் கேட்கும். ஆனால் உங்களது பிரார்த்தனைகள் எல்லாவற்றுக்கும் பதிலளிக்கப்பட்டுவிட்டால், உங்களது வாழ்க்கை பெரும் அழிவை சந்திக்க நேரிடலாம். அதனால், உங்களுக்கு வேண்டிய பொருள்நிலை சூழ்நிலைகளை உருவாக்குவதில் தாந்த்ரீகத்திற்கு நம்பிக்கையில்லை, ஆனால், அசாதாரணமான, உங்கள் அறிவிற்கு அப்பாற்பட்ட வடிவங்களையும், அடையாளங்களையும், தற்பொழுது இல்லாத திறன்களையுடைய விவேகத்தையும் உருவாக்குவதே தாந்த்ரீகத்தின் நோக்கம்.

யோகாவில் அதனை தந்த்ர யோகா என்று கூறுவார்கள் – நமது உடல், மனம், சக்தி ஆகியவைகளை வாழ்க்கையின் கருவிகளாக உபயோகப்படுத்தக் கற்றுக்கொள்வதனால், அது இன்னும் உயரமான வாய்ப்புகளைப் பெற நமக்கு உதவுகிறது.

அதனால், படைப்பவன் உருவாக்குவதுபோல, ஒருவருக்குத் திறன் வேண்டுமானால், அவர் தனது தனித்த ஆளுமையை, தனது கற்பனைத் திறனிலிருந்து தள்ளி வைப்பதுதான் மிக அடிப்படையான விஷயம். இதனை உங்கள் கற்பனைத் திறனில் ஏற்றிவிட்டால், அதில் வேறொரு படியான, உயிர் சக்திகளைக் கலந்தால், அதுவே ஒரு வாழ்க்கை வழிமுறையாகிவிடும். இந்த தாந்த்ரீக பாரம்பரியங்கள் இந்த விஷயங்களிலெல்லாம் தேர்ச்சிப் பெற்றுவிட்டன.

பொதுவாக மக்களுக்கு, தன்னோடு சம்பந்தமில்லாத அல்லது தான் ஈடுபடாத ஏதோ ஒன்றுடன் எப்படி நடந்துகொள்வது என்பது தெரிவதில்லை. நீங்கள் அந்த வரைமுறைகளைத் தாண்டிவிட்டால், உங்களால் பல அற்புதமான விஷயங்களை செய்ய முடியும். உங்களது ஆளுமையிலிருந்து, உங்களது எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள், சக்திநிலை ஆகியவைகளைப் பிரித்தெடுத்தால்தான், அப்படி நடக்கும்.

நீங்கள் இங்கு செய்யும் இந்த யோகாவெல்லாமே, அடிப்படையில், உங்கள் ஆளுமையை நீங்கள் செய்யும் எளிமையான வேலைகளிலிருந்து பிரித்தெடுப்பதுதான் – தற்பொழுது இந்த உலகில் நடந்ததற்கு ஓர் ஆழமான நேர்மாறு. ஒரு காலகட்டத்தில், “நீங்கள் கடவுளை நம்ப வேண்டும்” என்று பிரசாரம் செய்தார்கள், இப்பொழுது “நீங்கள் உங்கள் மேலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று பிரசாரம் செய்கிறார்கள். அதுவே மோசமாக இருந்தது, இது மிக மோசமாக இருக்கிறது. “நான் என் மேலேயே நம்பிக்கை வைக்காவிட்டால், நான் எப்படி தன்னம்பிக்கையுடன் இருக்க முடியும்? நான் என்னுடைய சுயமரியாதையை வளர்க்கவில்லையென்றால், இந்த உலகில் எப்படி நடந்துகொள்ள முடியும்?”

இப்பொழுது, நீங்கள் சுவாசிக்கும் காற்றே, உங்களை உயிருடன் வாழ வைக்க பலவிதமான செயல்கள் செய்கிறது. அதற்கு ஏதாவது சுய மரியாதை இருக்கிறதா? தயக்கமேயில்லாமல், ஒருவித பயமும் இல்லாமல், நாம் இதை சுவாசித்து, உள்ளே கொண்டு போகலாம். யாராவது ஒருத்தரையாவது, உங்களால் முழு நம்பிக்கையுடன் உள்ளே கொண்டு போக முடியுமா? தனி  மனிதனது, தனித்தன்மையானது ரொம்ப பலமாகிவிட்டதால், மனிதனை அவனது அசல் தன்மையிலிருந்து இடமாற்றிவிட்டது. அவன் ஒரு உயிராய் வாழ்வதை நிறுத்திவிட்டான். அவன் ஒரு உயிராய் வாழ்ந்தால், உயிராய் மட்டுமே வாழ்ந்தால், அவனுடைய திறன்கள் பிரம்மாண்டமானவை, அவை இந்த பருப்பொருள் வடிவத்துக்குள் அடங்க வேண்டியதில்லை, ஏனென்றால் அவனுக்கு எல்லாவற்றுக்கும் நுழைவுரிமை இருக்கிறது.