ராமர் கோவில் பூமிபூஜை : கோவையில் இந்து பாரத் சேனா இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

 

கோவையில் இந்துபாரத் சேனா அமைப்பினர் அயோத்தியில் நடைபெற்ற ராமர்கோவில் கட்டுவதற்கானபூமிபூஜையைகொண்டாடும்விதமாக, இனிப்புகள்வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கோவில் கட்டுவதற்காக,மத்திய அரசு,’ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில், அறக்கட்டளையை அமைத்தது.இதனை தொடர்ந்து, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா,பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் இதனைகொண்டாடும் வகையில்கோவையில் இந்து பாரத் சேனா அமைப்பின் சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. காந்திபுரம் விநாயகர் கோவில் பகுதியில் நடைபெற்ற இதில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் மகேஷ், மற்றும் மாநகரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.