பறக்கும் படையினருடன் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மேற்கு மண்டலம் வடவள்ளி மாரியம்மன் கோவில் வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும், வடவள்ளி பேருந்து நிலைய பகுதிகளில் டிராக்டர் வாகனங்கள் மூலமாக மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபடுவதையும் மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டார்.