ரூ. 25,000த்தில் “ஆஹா செம கல்யாணம்”

திருமணம் என்றாலே லட்சங்கள் செலவாகும் என்ற நிலை மாறி தற்பொழுது ஆயிரங்களில் முடிந்துவிடுகிறது. இதனையும் சிறப்பாக கோவையில் ‘ஆனந்த்குமார் ஈவென்ட்ஸ்’ எனும் நிறுவனத்தை நடத்தி வரும் செந்தில் முருகன்  “ஆஹா செம கல்யாணம்” என இலவச முகக்கவசங்களை வழங்கி அரசு விதிமுறைகளுடன்  25,000 செலவில் திருமணங்களை நடத்தி அனைவரையும் வியக்கவைத்து வருகிறார்.

கொரோனா காலகட்டத்தில் பல்வேறு தொழில் துறையினர் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வரும் நிலையில், தற்போதைய கொரோனா கால கட்டுப்பாடுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி செலவு குறைவாக திருமண நிகழ்ச்சிகளை நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், திருமண நிகழ்ச்சிகளை நடத்த நடுத்தர மக்கள் உட்பட  பல்வேறு  தரப்பினரும்  தற்போதைய காலகட்டத்தில் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் செலவுகளை குறைத்து வெறும் 25,000 ரூபாய் செலவில் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் முகக்கவசங்களை வழங்கி அரசு விதிமுறைகளுடன் திருமணங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருவதாக தெரிவித்தார். கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இவரது இந்த புது முயற்சி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.