நேரு பொறியியல் கல்லூரியில் தேசிய இணைய நூலக கருத்தரங்கு

கோவை நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான நூலக இணைய கருத்தரங்கு ஜூலை 30ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஜஜடி புதுதில்லி தலைமை நூலகர் நபி ஹாசன் சிறப்புரை ஆற்ற உள்ளார். இவர் இணைய நூலகம், நூலக கொள்கைகள், மின்னிதழ்களின் சந்தாக்கள், மின்புத்தகம் மற்றும் இணைய ஆராய்ச்சியின் பயன்கள் என நூலகம் சார்ந்த தகவல்களை பற்றி உரையாடவுள்ளார். இந்த 250 பயனாளர்கள் மட்டுமே இந்த இணைய கருத்தரங்கில் பங்கு பெற முடியும்.

இந்த இணைய கருத்தரங்கில் பங்கு பெரும் அனைத்துப் பயனாளர்களுக்கும் இலவச மின் சான்றிதழ் வழங்கப்படும். நிகழ்ச்சியில் பங்கு பெற கல்லூரி நூலகர் கரு. செந்தில்குமாரை 9600707504 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.