கோவையில் ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 117 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1261 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் நாளுக்கு நாள் கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து கோவை மாவட்ட பொதுமக்கள் அறிந்து கொண்டு, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.