அதிரடி ஆட்டக்காரர் M.S.தோனி பிறந்ததினம்

மகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni, சுருக்கமாக எம்.எஸ்.தோனி என்று அறியப்படுகிறார். இவர் ஜூலை 7, பான் சிங்கிற்கும் தேவகி தேவிக்கும் பிஹார், ராஞ்சியில் (தற்போது ஜார்கண்டில் உள்ளது) பிறந்தார்.

தோனிக்கு ஜெயந்தி என்ற சகோதரியும் நரேந்திரா என்ற சகோதரரும் உள்ளனர். தோனி ஆடம் கில்கிறிஸ்ட் ரசிகராவார், அவரது சிறுவயது முன்மாதிரிகள் துடுப்பாட்டத் தோழர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோராவர்.

தோனி, துடுப்பாட்ட அணியின் வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும் , 2008 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010 மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. நடுவரிசை மட்டையாளரும் இலக்குக் கவனிப்பாளரான இவர் ஒ.நா.ப. போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர் வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

மேலும் தற்கால வரையிட்ட நிறைவுத் துடுப்பாட்டத்தின் சிறந்த இலக்குக் கவனிப்பாளர்களில் ஒருவராகவும் சிறந்த அணித்தலைவராகவும் கருதப்படுகிறார்.

2004 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அடுத்த ஆண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றார். இவர் இந்த விருதை இருமுறை வென்ற முதல் வீரர் ஆவார்.

மேலும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009 ஆம் ஆண்டில் இந்திய குடிமக்களுக்கான நான்காவது மிக உயரிய மரியாதையாகக் கருதப்படும் பத்மஸ்ரீ விருது, 2018 ஆம் ஆண்டில், இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார்.

2009, 2010 மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான உலகப் பதினொருவர் அணியின் தலைவராக இவர் தேர்வானார். மேலும் இந்த அணியில் எட்டு முறை இடம் பிடித்தார். அதில் ஐந்து முறை தலைவராக இருந்தார். நவம்பர் 2011இல் இந்திய ரானுவம் தோனிக்கு கௌரவ துணைநிலை கர்னல் பதவி அளித்தது. இவர் கபில்தேவிற்குப் பிறகு இந்த மரியாதையைப் பெறும் இரண்டாவது வீரர் ஆவார்.

2012 ஆம் ஆண்டில் ஸ்போர்ட்ஸ் புரோ ஊடகத்தின் அதிக வியாபாரமாகக்கூடிய தடகள வீரர்கள் வரிசையில் இவருக்கு பதினாறாவது இடம் கிடைத்தது. இந்தியன் சூப்பர் லீக்கின் சென்னையின் எப் சி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். 2015 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் இவருக்கு 23 ஆம் இடம்கிடைத்தது (31 மில்லியன் அமெரிக்க டாலர்).

எம்.எஸ்.தோனி (திரைப்படம்) இவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டோனி ஒரு வலதுகை மட்டையாளரும், இழப்புக் கவனிப்பாளரும் ஆவார். ஜூனியர் அளவிலிருந்து தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்யும் இந்திய ஏ அணியிலிருந்து வந்த இழப்புக் கவனிப்பாளர்களுள் டோனியும் ஒருவராவார் – பார்திவ் பட்டேல், அஜய் ரத்ரா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இதே வழியைப் பின்பற்றி வந்தவர்களாவர்.

தனது நண்பர்களால் ‘மாகி’ என்று குறிப்பிடப்படும் டோனி 1998/99ஆம் ஆண்டு துடுப்பாட்டப் பருவத்தில் பீகார் துடுப்பாட்ட அணியில் விளையாடத் தொடங்கினார். கவுதம் கம்பீருடன் இணைந்து ஒரு முத்தரப்புத் தொடரில் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக டோனி மற்றும் என இருமுறை நூறு அடித்தார்.

டோனி பெரும்பாலும் அடிப்பகுதி கை கிரிப்பைக் கொண்டு பின்கால் பாணியிலேயே ஆட விரும்புகிறார். பந்தை நோக்கி இவருடைய கை வேகமாக செயல்படுவதால் அது மைதானத்திற்கு வெளியில் சென்று விழும் அளவிற்கு செல்கிறது. இந்த துவக்கநிலை பாணியில் இவருடைய கால் அதிக அசைவு கொடுக்காமல் இருப்பதனால் பந்தை அடிக்கையில் அது பல சமயங்களுக்கு பந்து பிட்ச் ஆகாத சமயங்களிலேயே நிறைய பந்துகள் இன்சைட் எட்ஜ் ஆகிவிடுகின்றன.

2005 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த அவருடைய ஒருநாள் சர்வதேச போட்டியில் டோனி 148 ரன்கள் எடுத்தார் – அதுவே இந்திய விக்கெட் கீப்பர் எடுத்த அதிகபட்ச ரன் ஆனது. அந்த ஆண்டில் பிற்பகுதியில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக அவர் ஆட்டம் இழக்காமல் 183 ரன்கள் எடுத்து தனது சொந்த சாதனையை முறியடித்ததோடு இரண்டாவது இன்னிங்ஸில் தற்போதைய உலக சாதனையையும் செய்துள்ளார்.

வரம்பிற்குட்பட்ட ஓவர்கள் ஆட்டத்தில் டோனி பெற்ற வெற்றி டெஸ்ட் அணியில் இவரது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 2005/06ஆம் ஆண்டு முடியும்வரையில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அவருடைய சீரான செயல்திறனானது டோனிக்கு குறுகிய காலத்திலேயே ஐசிசி ஒருநாள் சர்வதேச தரவரிசையில் முதலாவது இடத்தைப் பெற்றுத்தந்திருக்கிறது.

2006ஆம் ஆண்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, டிஎல்எஃப் கோப்பை மற்றும் வெளிநாட்டில் இரு அணி தொடர்களான மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றில் டோனியின் விளையாட்டுத் திறன் குறைந்து வந்தது. 2007ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஸ்ரீலங்காவுக்கு எதிரான உள்ளூர் ஆட்டங்களில் விளையாட்டுத் திறனுக்கு திரும்பி வந்த நிலையில் 2007ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் சுற்றில் இந்தியா படுதோல்வி அடைந்தபோது, டோனியின் விளையாட்டுத் திறன் போதுமானதாக இல்லை என்பதை நிரூபிக்கப்பட்டது. இந்தியா இழந்த இரண்டு ஆட்டங்களிலும் டோனி டக் அவுட் ஆகியிருந்தார். உலகக் கோப்பைக்குப் பின்னர் வங்காளதேசத்திற்கு எதிராக நடைபெற்ற இரு அணி ஒருநாள் சர்வதேசப் போட்டித்தொடரில் டோனி தொடர் நாயகன் விருதை வென்றார்.

இங்கிலாந்திற்கான சுற்றுப்பயணத்திற்கு டோனி ஒருநாள் சர்வதேசப் போட்டியின் துணைத்தலைவராக பரிந்துரைக்கப்பட்டார்.

ஒரு மட்டையாளராக, டோனி தனது அதிரடியான இயல்பைத் தடுத்து சூழ்நிலைக்கு தேவைப்படும்போது அந்த இன்னிங்ஸில் பொறுப்பாக விளையாடும் திறனை வெளிப்படுத்தினார். வழக்கமான மட்டை வீச்சையும் தாண்டி டோனியிடம் இரண்டு பழம்முறையிலான ஆனால் திறன்மிக்க கிரிக்கெட் மட்டைவீச்சு பாணிகள் இருந்தன. இவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு வந்ததிலிருந்து டோனியின் அதிரடியான மட்டை பாணி, களத்தில் பெற்ற வெற்றி, ஆளுமை மற்றும் நீண்ட தலைமுடி ஆகியவை இந்தியாவில் இவரை ஒரு குறிப்பிடத்தகுந்த சந்தை மதிப்பு உள்ளவராக மாற்றியது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது என தோனி முடிவு செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் 30 திசம்பர் 2014 அன்று அறிவித்துள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலைவரில் இருந்து ஒய்வு பெறுவதாக 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்திய அணியை விராட் கோலி வழிநடத்துவதே சிறப்பானது எனவும் தெரிவித்தார்.

பல்வேறு சூழ்நிலைகளைப் பொறுமையுடன் கடந்து, சாதனைகளுக்கும் வேதனைகளுக்கும் சமமான பங்கு தந்து, கடமையை, லட்சியத்தைக் கடந்த சாதனை நாயகன், வீட்டிற்கும் நாட்டிற்கும் பேர் சொல்லும் பிள்ளை, தனக்கென தனி பாணி கொண்ட நமது டோனி.