இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகாலனோபிஸ் 1893 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.
இவருடைய பிறந்த நாள் தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் கொல்கத்தாவில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை 1931 ஆம் ஆண்டு நிறுவினார். மகாலனோபிஸ் தொலைவு, ரேண்டம் சாம்ப்ளிங் முறை ஆகியவற்றை வரையறுத்துள்ளார்.
அமெரிக்க எகனாமிக் சொசைட்டியின் ஃபெலோஷிப், பத்ம விபூஷண், சீனிவாச ராமானுஜன் தங்கப்பதக்கம் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் புள்ளி விவர வளர்ச்சி துறைகளில் மிக உன்னதமான பங்களிப்பை வழங்கிய மகாலனோபிஸ் 1972 ஆம் ஆண்டு மறைந்தார்.