பிசிஆர் பரிசோதனைக்கு ரோபோடிக் இயந்திரம்

 கொரோனா வைரஸை கண்டறிய  பிசிஆர் பரிசோதனையை இதுவரை மருத்துவப் பணியாளர்கள் தான் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இவர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது இதற்கு மாற்றாக கோவையை சேர்ந்த  கார்த்திக் வேலாயுதம் என்ற இளைஞர் இதற்கான இயந்திரத்தை தயார்செய்துள்ளார்.

இந்த ரோபோடிக் கருவி பிசிஆர் பரிசோதனையின் சளி மாதிரி சேகரிப்புக்கு உதவுகிறது. ரோபோட்டிக் நேரடியாக பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் மருத்துவர் மற்றும் செவிலியர்களை தொற்று இல்லாமல் காப்பாற்றுவதற்கு உதவுவதுடன் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு இது பயனுள்ளதாகவும் இருக்கிறது. மேலும் ஒருவருக்கு பரிசோதனை மேற்கொண்ட பின்பு ஒவ்வொரு முறையும் சானிடைசர் திரவத்தையும் கொண்டு சுத்தம் செய்கிறது.

இதனைத் தொடர்ந்து இக்கருவியினை தயாரிப்பதற்கு மூன்று நாட்களாகிறது என்றும் இதனுடைய தற்போதைய விலை சுமார் 2000 வரை ஆகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அரசு அனுமதித்தால்  மருத்துவமனைகளுக்கு தயாரித்து வழங்கி விடுவோம் என்றும் தெரிவித்தார். இது போன்ற பயனுள்ள கருவிகளை மேலும் கண்டுபிடிப்பதற்கு முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற கண்டுபிடிப்புக்கு அரசு ஊக்குவித்தால் மேலும் பல கருவிகளை கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.