சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

உலகம் முழுதும் ஜூன் 26ஆம் நாள் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.   சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 கோடி பேர் போதை பொருள்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.

போதை என்றால் மது மற்றும் புகையிலைத் தொடர்பானவை என பலரும் நினைக்கின்றனர். ஆனால், இளம் தலைமுறையினரை சீரழிக்கும் சக்திவாய்ந்த போதை பொருட்களான கஞ்சா, அபின், கோகைன், பிரவுன் சுகர் மற்றும் ஒயிட்னர், சில பெயின்ட் வகைகள் என பலவகை பொருட்கள் போதையூட்ட பயன்படுத்தப்படுகின்றன.இவை மனிதரின் உடல், மனம் இரண்டையும் சிதைத்து சமூகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் போன்றவற்றை ஒழிக்க சட்டங்கள் மூலம் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஆனால் போதை பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.

போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு போதை பழக்கத்தின் தீமையை பற்றி, விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மேலும், அங்கீகரிக்கப்பட்ட மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.