முதல்வர் தலைமையில் மாவட்ட திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோவை ஆட்சியர் அலுவகத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டபணிகள், கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அத்திக்கடவு அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டபேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, அரசு உயர் அலுவலர்கள், மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத், மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.