பீளமேடு பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 38வது வார்டுக்குட்பட்ட, பீளமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத்  பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நடவடிக்கை எடுக்குமாறு சமந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பீளமேடு குப்பை மாற்று இடத்தில் இயந்திரம் பழுதடைந்துள்ளதால் அதையும் நேரில் பார்வையிட்டு, அதனை உடனடியாக சரிசெய்யுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.