சென்னை இளைஞர் கோவையில் மரணம்

கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற சென்னையில் பணியாற்றிய 28 வயது  இளைஞர் உயிரிழந்தார்.

இவர் சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

அண்மையில் கோவை வந்த இவர் சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் நேற்று அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் கடும் காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக இஎஸ்ஐ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்  வழியிலேயே இவர் உயிரிழந்தார்.