வடவள்ளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண் உள்பட மூன்று நபர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி முழுவதும் முடக்கப்பட்டு சுகாதாரத்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரபட்டுள்ளது.

கடந்த எட்டாம் தேதி சென்னையிலிருந்து கோவை வந்த வடவள்ளி பொம்மனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரனோ உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 27 வயதான அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் தனிமைபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று அந்த வாலிபரின் தாயார் மற்றும் அவரது தங்கையும் எட்டு மாத கர்ப்பிணிக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளபட்டது. இந்நிலையில் இன்று இருவருக்கும் கொரோனோ உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனோ உறுதி செய்யப்பட்ட வாலிபர் அந்த பகுதி முழுவதும் சுற்றிதிரிந்தாக கூறப்பட்டுள்ள நிலையில் சுகாதாரதுறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சீல் வைத்துள்ளதோடு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் முகாமிட்டு தினமும் இருநூறு பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.